ஆவிகள் பற்றிய உண்மைகள் | Avikal pattriya ummaikal
வணக்கம் நண்பர்களே..! இன்று இந்த பதிவில் ஆவிகளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.நாம் குழந்தைகளாக இருந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஆவிகள் பேய்களைப் பற்றி பேசுவது வழக்கமாக உள்ளது.உலகத்தில் உள்ள 40% மக்கள் பேய்கள் ஆவிகளை இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
ஆவிகள் வரும் நேரம்
ஆவிகள் இரவு நேரத்தில் முனைப்புடன் செயல்படுகிறதாம். ஆவிகள் இரவு நேரத்தில் வருவதற்கான முக்கிய காரணம் இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கிறது. வெளிச்சம் என்பது பேய்களுக்கு மிகவும் தொந்தரவுமான ஒன்றாகும்.நம் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் பேய்கள் ஆவிகளின் தொந்தரவுகளை நம் உணர முடியும்.
ஆவிகள் வெளிப்படும் விதம்
ஆவிகள் அடர்த்தியான வெளிச்சம் இரவு நேரம் பனிமூட்டங்கள் இருக்கும் பொழுது நம்மால் ஆவிகளை உணர முடியும். முழு உடலுடன் ஆவிகள் மற்றும் பேய்கள் வெளிப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாம்.ஆனால் அது அதிக அளவில் யார் கண்ணுக்கும் தெரியாதாம்.
ஆவிகள் யார் கண்களுக்கு தெரியும்
ஆவிகள் மற்றும் பேய்கள் பொதுவாக மிருகங்கள் குழந்தைகள் கண்களுக்கு தெரியும். சில குழந்தைகள் ஆவிகளை தனது கற்பனை நண்பர்களாகவே எடுத்துக் கொள்வார்கள்.
ஆவிகள் வருவதை எப்படி கண்டுபிடிப்பது
வீட்டில் மெழுகுவர்த்தி எரியும் பொழுது திடீரென நீல நிறத்தில் எரிந்தால் அல்லது எந்த ஒரு காற்று இல்லாமல் திடீரென்று எறிவது அணைந்து போனாலும் ஆவிகளை உங்களால் உணர முடியும்.
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன் |
ஆவிகள் வருவதற்கான காரணம்
பொதுவாக ஆவிகள் உதவும் குணத்தை கொண்டவைகள் ஆவிகள் அனைத்தும் தீய சக்திகளில் இருந்து தங்களின் குடும்பத்தை பாதுகாக்கும்.
மரணம் என்றால் என்ன
மரணம் என்பது ஒரு உருவத்தில் இருந்து மற்ற உருவத்திற்கு செல்லக்கூடிய மாற்றமே மரணம் என்று அனைவரும் நம்புகிறார்கள்.
பேய்களை நேரில் பார்த்தவர்கள்
வெள்ளை மாளிகையில் பேய்கள் இருக்கிறது என்று பல தகவல்கள் வந்தது. அங்கு இறந்து போன பெண் ஒருத்தி தன் துணிகளை தொங்க விட்டபடி கிழக்கு அறையை நோக்கி சென்றதை அனைவரும் பார்த்து உள்ளார்களாம். ஆபிரகாம் லிங்கன் இறந்த பிறகும் கூட வெள்ளை மாளிகையில் தான் ஆவியாக சுற்றி திரிகிறாராம்.