ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன் | Aadai Illamal Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் அப்படி வரும் கனவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. தூக்கத்தில் வரும் கனவுகளில் நல்லது நடப்பது மாதிரியும் வரலாம் கெட்டது நடப்பது மாதிரியும் வரலாம்.
நல்லது நடப்பது போல் கனவு வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் கெட்டது நடப்பது போல் கனவு வந்தால் ஏதாவது நடந்து விடுமோ என்று பயத்துடன் இருப்போம் நீங்கள் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.கனவில் நீங்கள் அல்லது வேறு யாரோ ஆடை இல்லாமல் இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன்
ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பது போல் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டு நீங்கள் நம்பிக் கொண்டு இருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.நண்பர்களுடன் இருக்கும் நட்பில் விரிசல்கள் விழும். உங்களின் மன நிம்மதிகள் குறைந்து மன அழுத்தம் ஏற்படும்.
தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் கனவில் தான் நிர்வாணமாக இருப்பது போல் வந்தால் பொருள் நஷ்டம் ஏற்பட்டு தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். நீங்கள் நம்பிக் கொண்டு இருப்பவர்கள் கூட உங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.
திருமணம் ஆகாதவர்கள் கனவில் ஆடை இல்லாமல் இருப்பது போல் வந்தால் அவர்கள் நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் அவமானம் ஏற்பட்டு உங்களின் பெயர் கெட்டுவிடும்.
ஆடை இல்லாமல் குளிப்பது போல் கனவில் வந்தால்
ஆடை இல்லாமல் குளிப்பது போல் கனவில் வந்தால் வாழ்வில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நண்பர்களுடன் இருக்கும் நட்பு அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைத்தது வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |