அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | Amman kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அம்மன் கனவில் வந்தால் என்ன நடக்கும் எப்படி தெரிந்து கொள்வது என்று குழம்பிக் கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும் வேண்டாம் அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
அம்மன் கனவில் வந்தால் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மனின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு வரும் பிரச்சனைகள் எல்லாம் விலகிச் சென்று விடும்.
ஏற்கனவே நீங்கள் பல பிரச்சினைகளில் இருந்தாலும் அந்த பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகி சென்று விடும். நீங்கள் செய்யும் செயல்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.அம்மன் கனவில் வந்தாலே நீங்கள் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய பாக்கியங்கள் செய்திருக்கிறீர்கள்.
வராகி அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
வாராகி அம்மன் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டங்கள் இருந்தால் அந்த கஷ்டங்களை போக்குவதற்காக வாராகி அம்மன் கனவில் வருகிறார்கள். வராகி அம்மன் கனவில் வந்தால் அவர்களின் திருஉருவப்படத்தை வைத்து வணங்க வேண்டும்.
அவர்கள் உங்களை வழிபட அழைக்கிறார்கள்.அம்மன் கனவில் வந்தாலும்,வராவிட்டாலும் அவர்களை வணங்குவதன் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக கடவுள் கனவில் வந்தாலும் அல்லது கடவுள் இருக்கும் கோயில் கனவில் வந்தாலும் அது நல்லதுக்கு தான். கடவுளின் முழு அருள் உங்களுக்கு கிடைக்கிறது என்று அர்த்தம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
இசக்கி அம்மன் கனவில் வந்தால்
இசக்கி அம்மன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.பொதுவாக அம்மன் கனவில் வந்தாலே அவர்களை வழிபடுவதற்கு உங்களை அழைக்கிறார்கள் என்று அர்த்தம்.அதனால் கனவில் வரும் கடவுளை வணங்குவதின் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கிவிடும்.
மாசாணி அம்மன் கனவில் வந்தால்
மாசாணி அம்மன் கனவில் வந்தால் அவர்கள் உங்களிடம் சொல்ல வருவது மற்றவர்களிடம் உங்கள் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டாம் என்றும் நீங்கள் மற்றவர்களிடம் தேவையான விஷயங்களை மட்டும் பேச வேண்டும் என்று அவர்கள் உங்களுக்கு கனவில் மூலம் உணர்த்துகிறார்கள்.
மீனாட்சி அம்மன் கனவில் வந்தால்
மீனாட்சி அம்மன் கனவில் வந்தால் நீங்கள் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களாக இருந்தால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை செய்து கொண்டே இருப்பவர்களாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு மற்றும் சம்பளமும் அதிகரிக்கும்.
அங்காளம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
அங்காளம்மன் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு காரியங்கள் செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அந்த தொழிலை இப்பொழுது தொடங்கலாம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
பொதுவாக அம்மன் கனவில் வந்தாலே அவர்கள் உங்களை வணங்குவதற்கு அழைக்கிறார்கள். அம்மன் கனவில் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் |
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆவிகள் பற்றிய உண்மைகள் |