Homeமருத்துவம்மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

இதுவரை வெயில் காலம் இருந்ததால் நீரிழிவு நோய், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் தான் ஏற்பட்டு கொண்டிருக்கும் ஆனால் இனிவரும் காலம் மழை காலமாக இருப்பதால் டெங்கு மலேரியா காய்ச்சல் சளி இருமல் போன்ற நோய்கள் வந்துவிடும். இது போன்ற நோய்கள் வராமல் இருப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

இது போன்ற நோய்களிடம் இருந்து விடுபடுவதற்காக பல மருந்துகளை தான் பயன்படுத்தி வருவோம் ஆனால் அது செயற்கையாக செய்யப்பட்ட மருந்து என்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூட கூடும். அதனால் நமக்கு எளிய முறையில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து இது போன்ற நோய்களிடமிருந்து விடுபடலாம்.

- Advertisement -

இயற்கை மருந்து பொருட்கள்

எளிமையாக கிடைக்கும் பொருட்களின் மூலமாகவே இயற்கையாகவே பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது அந்த வகையில் இஞ்சி,திரிபலா சூரணம், மஞ்சள், துளசி போன்ற பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

இஞ்சி மருத்துவ பயன்கள்

இஞ்சி என்பது அனைவரின் வீட்டில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.பொதுவாக நாம் சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகவில்லை என்றால் பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படும். இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் சரியாகிறது அது மட்டுமில்லாமல் மழை காலம் என்றாலே சளி,இருமல் போன்ற நோய்கள் வந்துவிடும்.

- Advertisement -

சளி இருமல் வந்தால் இஞ்சி டீ மற்றும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் சளி,இருமல் என்பது குறைந்து விடும்.இஞ்சி ஆண் பெண் இருவரின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கிறது அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சனையை சரி செய்வது மட்டுமில்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் விந்து முந்துதலை தடுக்கவும் உதவியாக இருக்கிறது.

மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

- Advertisement -

மஞ்சள் மருத்துவ பயன்கள்

மஞ்சள் என்ற இந்த பொருள் அனைவரின் வீட்டு சமையல் அறையில் இருக்கும் முக்கியமான பொருளாகும். சாம்பார்,ரசம்,பொரியல் இன்னும் பல உணவு தயாரிப்பதற்காக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.பெண்கள் சர்மம் அழகாக இருப்பதற்காக மஞ்சளை பயன்படுத்தி வருகிறார்கள் இப்படி பயன்படுத்தும் மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது அதாவது ஆஸ்துமா, மூட்டு வலி மூக்கு ஒழுகுதல் இருக்கும். மஞ்சள் சாப்பிட்டால் இது போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

துளசி மருத்துவ பயன்கள்

துளசியில் பல மருத்துவ பயன்கள் இருக்கிறது கிராமப்புற பகுதியில் மிகவும் எளிமையாக கிடைக்கும் ஒரு முக்கிய மருத்துவ பொருளாக துளசி இருக்கிறது. துளசி சாப்பிடுவதன் மூலம் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இது மட்டும் இல்லாமல் ஆஸ்துமா,காது வலி,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் துளசி சாப்பிடுவதன் மூலம் சரியாகிவிடும்.இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால்தான் துளசி சாப்பிட வேண்டும் என்று எல்லாம் அவசியம் கிடையாது சும்மாவே துளசியை சாப்பிடலாம் அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

திரிபலா சூரணம் மருத்துவ பயன்கள்

திரிபலா சூரணம் என்பது மூன்று முக்கிய மூலிகை பொருட்களை வைத்து செய்யப்பட்ட ஒரு மருத்துவ பொருளாகும். நெல்லிக்காய்,கடுக்காய்,தன்றிக்காய் போன்ற மூன்று முக்கிய மூலிகையை வைத்து செய்யப்பட்ட பொருளாக இருக்கிறது. திரிபலா சூரணம் பெரும்பாலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சாப்பிடப்படுகிறது அதாவது வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் சரியாவதற்கு திரிபலா சூரணம் சாப்பிடப்படுகிறது அது மட்டும் இல்லாமல் முடி கொட்டுபவர்களும் திரிபலா சூரணம் சாப்பிடலாம்.

மழைக்காலத்தில் வரும் நோய்களுக்கு பயப்படுகிறீர்களா ? இந்த மூன்று பொருள் போதும் நோய்களை விரட்டி விடும்!

வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR