Homeஆன்மிகம்கனவு பலன்கள்மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Mirukangal kanavil vanthal

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Mirukangal kanavil vanthal

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Mirukangal kanavil vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

தூங்கும் போது கனவு வருவது வழக்கம் அந்த கனவில் சிங்கம் புலி கரடி யானை போன்றவைகள் நம்மளை துன்புறுத்துவது போல் அல்லது அந்த மிருகங்களுடன் நாம் விளையாடுவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

மிருகங்களை வேட்டையாடுவது போல் கனவில் வந்தால்

மிருகங்களை வேட்டையாடுவது போல் கனவில் வந்தால் நமக்கு வரும் எதிர்ப்புகளை நாமே முறியடித்து ஒரு நல்ல நிலைமைக்கு முன்னேறுவோம்.

முயல் கனவில் வந்தால்

முயல் கனவில் வந்தால் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தால் உங்கள் சொந்த ஊருக்கு சென்று உங்கள் நண்பர்கள் உறவினர்களை பார்ப்பீர்கள் அல்லது அவர்கள் உங்களை வந்து பார்ப்பார்கள்.

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Mirukangal kanavil vanthal

- Advertisement -

நரி கனவில் வந்தால்

நரி கனவில் வந்தால் உங்கள் சொந்த ஊரை விட்டு நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று உங்களின் புது வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

குதிரை கனவில் வந்தால்

குதிரை கனவில் வந்தால் நீங்கள் எதுவும் வழக்குகளைத் தொடர்ந்து இருந்தால் அந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

- Advertisement -

குதிரை மீது சவாரி செய்வது போல் கனவில் வந்தால்

குதிரை மீது சவாரி செய்வது போல் கனவில் வந்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பசுக்கள் கனவில் வந்தால்

பசுக்கள் கனவில் வந்தால் ஏதேனும் பொருட்கள் அல்லது புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும்.

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Mirukangal kanavil vanthal

சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால்

காளை மாடு கனவில் வந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை வந்து சேரும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும்.

ஆடுகள் கனவில் வந்தால்

ஆடுகள் கனவில் வந்தால் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

நாய்கள் கனவில் வந்தால்

நாய்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மீது பழி வந்து சேரும் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குரங்கு கனவில் வந்தால்

குரங்கு கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தினரோடு அல்லது உங்கள் நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும் அதனால் நீங்கள் நண்பர்களுடன் மிகவும் கவனமாக பேச வேண்டும்.கடன் தொல்லை உங்களுக்கு அதிகரிக்கும்.

யானை கனவில் வந்தால்

யானை கனவில் வந்தால் உங்களது நண்பர்கள் மூலம் அல்லது உறவினர்கள் மூலம் செல்வங்கள் வந்து சேரும்.

யானையின் மீது சவாரி செய்வது போல் கனவில் வந்தால்

யானையின் மீது சவாரி செய்வது போல் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொந்தமாக வீடு வண்டி வாகனங்கள் சொத்துக்கள் என வாங்குவதற்கு யோகம் உங்களை தேடி வரும்.

மயில் கனவில் வந்தால்

மயில் கனவில் வந்தால் நீங்கள் திருமணம் செய்து இருந்தீர்கள் என்றால் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரித்து மிகவும் சந்தோஷமாக வாழ்வீர்கள். உங்கள் குடும்பத்தில் ஏதேனும் ஒரு சுப காரியம் நிகழும்.

பறவைகள் கனவில் வந்தால்

பறவைகள் கனவில் வந்தால் நெடு நாட்களாக உங்களுக்கு இருந்த துன்பம் உங்களை விட்டு நீங்கி செல்கிறது என்று அர்த்தம். உங்களைத் தேடி புதிய பதவிகள் வரும். அந்தப் பதவியின் மூலம் உங்களுக்கு மிகப்பெரிய புகழும் கிடைக்கும்.

கிளிகள் கனவில் வந்தால்

கிளிகள் கனவில் வந்தால் உங்களது குழந்தை பருவ அல்லது பழைய நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மனம் லேசாகி மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR