நாகம் கனவில் வந்தால் என்ன பலன் | Nagam Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
கருநாகம்,ராஜநாகம்,வெள்ளை நாகம் என பாம்புகளில் பல வகைகள் இருக்கிறது விஷம் இல்லாத பாம்பு கனவில் வந்தால் கூட நமக்கு பயமாக தான் இருக்கும்.அந்த வகையில் நாகம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாகம் கனவில் வந்தால் என்ன பலன்
நாகம் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும் புதிதாக தொழில் ஏதும் தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அந்த தொழிலை தொடங்க வேண்டும்.கனவு காண்பவர் விழிப்புடன் இருப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
வெள்ளை நாகம் கனவில் வந்தால் என்ன பலன்
வெள்ளை நாகம் கனவில் வந்தால் கனவு காண்பவர் மனம் தூய்மையாக இருக்கும் நல்ல எண்ணங்களுடன் செயல்படுவார். செய்யும் ஒவ்வொரு காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பெரிய பாம்பு கனவில் வந்தால் |
ராஜ நாகம் கனவில் வந்தால் என்ன பலன்
இந்துக்கள் முறைப்படி நாகங்களை தெய்வமாக வணங்கி வருகிறோம்.அந்த வகையில் ராஜ நாகம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிரிகளிடம் இருந்து பிரச்சனைகள் வர இருப்பதையும் பல பேர் நஞ்சு எண்ணங்களுடன் பழகுவதியும் இந்த கனவு உணர்த்துகிறது.
கருநாகம் கனவில் வந்தால் என்ன பலன்
கருநாகம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிரிகள் இருந்தால் அவர்கள் மூலம் பல பிரச்சனைகள் வரவிருக்கிறது.அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
புதிதாக ஏதும் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்த தொழிலை செய்தால் நமக்கு லாபம் கிடைக்குமா என்று யோசித்து செய்ய வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
வெள்ளை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |