நாமக்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது கோழி பண்ணை மற்றும் நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில்தான் அப்படிப்பட்ட ஆஞ்சநேயர் கோயிலில் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. 33 லட்சத்து 31 ஆயிரம் செலவில் வர்ணம் பூசம் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் முக்கால்வாசி முடிவடைந்ததால் வருகின்ற நவம்பர் 1ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதற்காக கோயிலின் அறங்காவலர் குழு கூட்டம் போடப்பட்டது அந்த கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அறநிலை துறை ஆணையருக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவர்களிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -