Homeஆன்மிகம்கனவு பலன்கள்உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Uravinar kanavil vanthal

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Uravinar kanavil vanthal

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Uravinar kanavil vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

தூங்கும்போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றாகும் அந்த கனவில் நமக்கு உறவினர்கள் சொந்தக்காரர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் நம்மிடம் பேசுவது சண்டை போடுவது விளையாடுவது போல பல கனவுகள் வரும் அந்த கனவுகளுக்கெல்லாம் என்ன பலன் என்று இந்த பதிவில் நம் பார்க்க இருக்கிறோம்.

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

உறவினர்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் சந்தோசமான செய்திகள் உங்களை தேடி வரும்.உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடிவு செய்து இருந்தால் அந்த பயணம் வெற்றிகரமாக தொடங்கி வெற்றிகரமாக முடியும்.செல்வங்கள் உங்களை வந்து சேரும் புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும். நீண்ட நாட்களாக ஏதேனும் ஒரு காரியம் தடைப்பட்டு இருந்தால் அது எப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்.

தெரிந்தவர்கள் கனவில் வந்தால்

தெரிந்தவர்கள் கனவில் வந்தால் உங்கள் தொழிலில் முன்னேற்றங்கள் கிடைக்கும். உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு சுப காரியங்கள் நடக்கும்.

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

- Advertisement -

சொந்தங்கள் கனவில் வந்தால்

சொந்தங்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். திருமணம் ஆகாமல் வரன் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் வரன் கிடைத்து திருமணம் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது. திருமணம் ஆனவராக இருந்தால் வீட்டில் ஒரு சுபகாரியம் நடக்கும்.

தந்தை கனவில் வந்தால்

தந்தை கனவில் வந்தால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடுவீர்கள் வரப்போகும் கஷ்டங்கள் கூட உங்களைத் தேடி வராது. நீங்கள் ஏதேனும் செய்வதற்காக ஆசை வைத்திருப்பீர்கள் அந்த ஆசைகள் விரைவில் நடக்கும்.

- Advertisement -

தந்தையை காட்டி அணைப்பது போல் கனவில் வந்தால்

தந்தையை கட்டி அணைப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தானே தீர்ந்துவிடும். உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்.

இறந்த தந்தை கனவில் வந்தால்

இறந்த தந்தை கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாத ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்தால் அந்த பிரச்சினையை நீங்கள் தீர்த்து விடுவீர்கள்.

தாய் கனவில் வந்தால்

தாய் கனவில் வந்தால் நீங்கள் ஒரு முக்கியமான காரியத்தை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு கவனம் அதிகம் தேவை எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சாதாரணமாக நினைத்து செய்வீர்கள்.நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்ய வேண்டும்.

சகோதரர்கள்  கனவில் வந்தால்

சகோதரர்கள் கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.

சகோதரர்கள் பிரிவது போல் கனவில் வந்தால்

சகோதரர்கள் பிரிவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறியாகும்.

உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

சகோதரர்கள் இறப்பது போல் கனவில் வந்தால்

சகோதரர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் உங்கள் எதிர்காலம் மிகவும் கவலையாக இருக்கும்.

சித்தி கனவில் வந்தால் என்ன பலன்

சித்தி கனவில் வந்தால் கனவு காண்பவர் நீண்ட நாட்களுக்கு முன்பாக தொழில் ஒன்றின் முதலீடு செய்து இருந்தால் அந்த முதலீட்டின் மூலம் இப்பொழுது லாபம் கிடைக்கும். ஒரு சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.நீங்கள் செய்யும் முதலீட்டில் அளவிற்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR