Homeஆன்மிகம்கனவு பலன்கள்வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் | Vellai poo kanavil vanthal

வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் | Vellai poo kanavil vanthal

வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் | Vellai poo kanavil vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

தூங்கும் பொழுது தினந்தோறும் கனவு வருவது என்பது வழக்கம் அந்த கனவில் உயிரினங்கள் விலங்குகள் உறவினர்கள் நண்பர்கள் என பல கனவுகள் வரும் அந்தக் கனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது உங்கள் கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

மல்லிகைப்பூ கனவில் வந்தால்

மல்லிகை பூ கனவில் வந்தால் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதாவது திருமணமாகாதவர்களாக இருந்தால் கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைப்பார்கள் என்று அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் | Vellai poo kanavil vanthal

வெள்ளை தாமரை கனவில் வந்தால்

வெள்ளை தாமரை கனவில் வந்தால் சரஸ்வதி தேவி சாமி அருள் நேரடியாக உங்களை வந்து சேரும். நீங்கள் படிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு படிப்பில் மிகவும் ஆர்வம் அதிகமாகி படிப்பில் ஒரு சாதனை படிப்பீர்கள். வேலை செய்பவர்களாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

- Advertisement -

கர்ப்பிணிப் பெண் கனவில் வெள்ளை நிற பூக்கள் வந்தால்

கர்ப்பிணிப் பெண் கனவில் வெள்ளை நிற பூக்கள் வந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் | Vellai poo kanavil vanthal

- Advertisement -

கர்ப்பிணி பெண் கனவில் சிவப்பு நிற பூக்கள் வந்தால்

கர்ப்பிணி பெண் கனவில் சிவப்பு நிற பூக்கள் வந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ரோஜா பூ கனவில் வந்தால்

ரோஜா பூ கனவில் வந்தால் நீங்கள் ஏதாவது ஒரு செயல் செய்து இருந்தீர்கள் என்றால் அந்த செயலுக்கு தற்பொழுது பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களுக்கான நன்மைகள் உங்களைத் தேடி வரும்.

முல்லை பூ கனவில் வந்தால்

முல்லை  பூ கனவில் வந்தால் உங்களின் தாய் வழி உறவினர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

பன்னீர் பூ கனவில் வந்தால்

பன்னீர் பூ கனவில் வந்தால் உங்கள் நண்பர் அல்லது உறவினர்கள் குடும்பத்தினர்கள் யாராவது வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்தால் அவர்களிடம் இருந்து நல்ல செய்தி உங்களுக்கு வரும்.

பவளமல்லி கனவில் வந்தால்

பவளமல்லி கனவில் வந்தால் தந்தை வழி உறவினர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

சாமந்திப்பூ கனவில் வந்தால்

சாமந்திப்பூ கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஏதேனும் சுப காரியம் நடக்க வாய்ப்பு உள்ளது.

வாடாமல்லி பூ கனவில் வந்தால்

வாடாமல்லி பூ கனவில் வந்தால் உறவினர்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து ஒரு சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

அல்லி பூ கனவில் வந்தால்

அல்லி பூ கனவில் வந்தால் மனைவி வழி உறவினர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR