Homeமருத்துவம்சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமா? தினமும் திராட்சை சாப்பிட்டால் போதும்.

சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமா? தினமும் திராட்சை சாப்பிட்டால் போதும்.

நம் முன்னோர்களால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்து உடல் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது உணவு தயாரிக்கும் பொழுது பல ரசாயனம் கலந்த மருந்துகளை உரமாக போட்டு தான் உணவுப் பொருட்களை விளைவிக்கிறார்கள்.அதனால் அந்த உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படுகிறது.அதனால் உடலுக்கு வைட்டமின் சி சக்தியை அதிகரிப்பதற்கு பல மருந்துகளை வாங்கி சாப்பிடுவோம்.

இனிமேல் மருந்து சாப்பிட்டு தான் உடலுக்கு வைட்டமின் சி சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.நீங்கள் விரும்பி சாப்பிடக்கூடிய திராட்சையின் மூலமாகவே உடலுக்கு தேவையான வைட்டமின் சி சக்திகளை எடுத்துக் கொள்கிறது.

- Advertisement -

சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமா? தினமும் திராட்சை சாப்பிட்டால் போதும்.

திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

பெரும்பாலும் திராட்சை என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.திராட்சை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயிலிருந்து தடுக்கும் திறனை கொண்டுள்ளது.

திராட்சை சாப்பிடுவதன் மூலம் உடலை புற்றுநோயிலிருந்து மட்டும் பாதுகாக்காமல் இதய நோயில் இருந்தும் திராட்சை பாதுகாக்கிறது. இதய சம்பந்தமான நோயில் பாதிக்கப்பட்டு இருந்தால் தினமும் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்கள் சரியாகிவிடும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு தேவையில்லாத கொழுப்புகள் உடலில் தங்கிவிடும்.அந்த கொழுப்புகளை குறைப்பதற்காக உணவு சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு டயட்டில் இருப்பார்கள். இனிமேல் கவலை வேண்டாம் திராட்சியை சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உடம்பில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

பெரும்பாலும் இப்பொழுது உள்ளவர்களுக்கு 30 வயதுகள் தாண்டினாலே சர்க்கரை நோய் என்ற கோரைப்பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள் அதன் அளவை குறைப்பதற்காக பல உணவுகளை தவிர்த்தும் பல உணவுகளை சாப்பிட்டும் வருகிறார்கள். தினமும் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரை நோயின் அளவை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கிறது.

- Advertisement -

சிறியவர்களுக்கு மூளை வளர்வதற்கு மற்றும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கு வல்லாரைக்கீரை மற்றும் வெண்டைக்காயை உணவில் சேர்த்து கொடுப்பார்கள் ஆனால் பெரும்பாலும் குழந்தைகள் இந்த உணவுகளை சாப்பிட தவிக்கிறார்கள் அதனால் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கு திராட்சை பழம் கொடுக்கலாம் திராட்சை பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பெரும்பாலும் உடலில் எலும்புகள் வலுவாக இருந்தால் தான் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் அதனால் எலும்புகளை வலுவாப்பதற்கு சாப்பிட பிடிக்காத உணவுகளை சாப்பிடுவார்கள் இனிமேல் கவலை வேண்டாம் திராட்சையை சாப்பிட்டு வந்தால் போதும் எலும்புகள் வலுவாக இருக்கும்.

இரவு நேரங்களில் தூக்கம் வராமல் பல பேர் தவித்துக் கொண்டு இருப்பார்கள் அது மட்டுமல்லாமல் தூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரைகளும் போடுவார்கள் தூக்க மாத்திரை போட்டால் தூக்கம் வருவது என்பது உண்மைதான் ஆனால் தூக்க மாத்திரையை அதிக அளவு பயன்படுத்தினால் அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இனிமேல் தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்த வேண்டாம் தினமும் திராட்சையை சாப்பிட்டு வந்தால் போதும் இயற்கையாகவே தூக்கம் வரும்.

பெண்கள் பெரும்பாலும் இளமையாக இருக்க வேண்டும் பல ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருவார்கள் அதன் மூலம் சிறிது காலம் சருமம் பொலிவாக இருக்கும் அதன் பின்பு பல பக்க விளைவுகள் ஏற்படும் அதனால் இயற்கையாக கிடைக்கும் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் நீண்ட நாட்கள் இருக்கும்.

பெரும்பாலும் இப்பொழுது இருக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்காமல் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகிறது.அதனால் நாம் பல பழங்களைக் காய்களையும் உணவுகளில் சேர்த்து வருகின்றோம் அதில் திராட்சையும் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR